முன்னுரை:
இது எழுதி ரொம்ப நாட்கள் ஆகிறது இங்கு இன்றுதான்(20/04/23) பதிவிடுகிறேன்
பராசக்தி கான்செப்ட் ரொம்ப வருடமாக
மனதில் ஓடிக்கொண்டிருந்தது மேலும் சரியான கான்செப்ட் இல்லாததால் இவ்வளவு
வருடம் ஆகியிருக்கிறது இந்த நவீன பராசக்தி
மேலும் இதில் இரண்டு பேரை பற்றி பேசவே விரும்பினேன் நான் பெண்களை
மதிப்பவன் பெரும்பாலும் பெண்களைப்பற்றி
தவறாக கருத்தியல் சொல்லி பழக்கமில்லை அதனால் அதை பற்றியதை சொல்லவில்லை
பொதுவாகவே பெண்களுக்கு பேராசை குணம் இயற்கையிலேயே உள்ள சுபாவம் அது அவரவர்
வாழ்வியல் சூழலுக்கு ஏற்றார் போல் மாறும், பெண்களால் அதிகம் நான்
பாதிக்க்கப்பட்டிருந்தாலும் அதை நான்
பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
இதை விடியோவாக பதிவிடவே விரும்பினேன் ஆனால் உண்மையான முழு வசனம் ஐந்து பக்கம்
நேரமும் அதிகம் மேலும் சிவாஜி நடித்த பாத்திரத்தில் இமிடேட் செய்ய மனமில்லை அதனால்
இதை பதிவாக போடுவதே நல்லதாக தோன்றியது.
நவீன பராசக்தி
நீதி மன்றம் பல விசித்திரம் நிறைந்த
வழக்குகளை சந்தித்திருக்கிறது,புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது ஆனால்
இந்த வழக்கு விசித்திரமானதுமல்ல ஆனால் வழக்காடும் நான் விசித்திரமான மனிதன்.
வாக்கைப்பாதையிலே சர்வசாதாரணமாக தென்படக்கூடிய மனிதன் அல்ல நான்
வேலை செய்த இடத்தில் இருந்து சொல்லாமல் போனேன் போனை எடுக்கவில்லை குற்றம்
சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்,நீங்கள் எதிர்பார்க்கிறிகள் நான்
இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று இல்லை நிச்சயமாக இல்லை.
வேலையை விட்டு போனேன் வேலை செய்யக்கூடாதென்பத்ர்க்காக அல்ல மனசாட்சியை
அடகுவைத்து வேலை செய்யக்கூடாதென்பதற்காக. .
மருத்துவம் என்னும் பெயரில் அங்குள்ளவர்களை மன நோயாளியாக
ஆக்கிக்கொண்டிருந்தான் அதை வெளி உலகிற்கு சொல்லவேண்டும் என்பதற்காக
உனக்கேன் இவ்வளவு அக்கறை?உலகில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்?
நானே பாதிக்கப்பட்டேன்,நேரிடையாக பாதிக்கப்பட்டேன்,சுயநலம் என்பீர்கள் ஆம் என்
சுயநலத்திலும் பொது நலம் கலந்திருக்கிறது.
எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி தன்னுடைய வாழ்வாதாரத்திர்க்காகவும்
தன்னுடைய சந்ததியினருக்காகவும் மனித கழிவுகளை மலக்குழியில் இறங்கி சுத்தம்
செய்கிறார்களே சுயநலமில்லா மனிதர்கள் அவர்களைப்போல,
என்னை குற்றவாளி என்கிறார்கள் இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையில் கொஞ்சம்
பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள பாதைகளில் என்னால் எத்தனை பேர்
வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரியும்.
சுயநலமுள்ள மனிதர்கள் நிறைய பேரை பார்த்திருக்கின்றேன்,
என்னால் லாபமடைந்த முதலாளிகள்தான் அதிகம்,
பெண்களை தவறாக பார்த்ததில்லை தவறாக பழகியதுமில்லை ஆனால் பெண்களால்
பாதிக்கப்பட்டிருக்கின்றேன்,
கேளுங்கள் என் கதையை தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ் நாட்டிலே முத்தமிழ்ச்சங்கம் தோன்றிய பாண்டிய நாட்டிலே பிறந்தவன்
நான்,பிறந்தது ஒரு ஊர் பிழைக்க ஓர் ஊர்
சென்னை என் உயிரை வளர்த்தது உயர்ந்தவனாக்கியது
முதல் திருமணம் விவாகரத்தில் முடியவே திருமணமே வேண்டாமென இருந்த நான் பத்து
வருடங்களுக்குப்பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தால் இணையத்தில்
பெண் பார்த்தேன் ஒருத்திக்கு என்னை பிடித்திருந்தது இருவரும் காதலித்தோம் ஒரு நாள்
அவளும் என்னை பார்க்க வந்தாள் நானும் அவளை
சந்திக்க மதுரைக்கு பைக்கில் சென்றேன்,
ஆம் காதலுக்கு வயது
ஒரு விதிவிலக்கல்ல
காதலில் விழுந்தவர்களில்
நானும் ஒருவன்
பெற்றோரை
எதிர்த்தேன்,
உறவுகளை பறிகொடுத்தேன்,
நல்ல நட்புகளை
இழந்தேன்,
பசியால் திரிந்தேன்
மெலிந்தேன்
கடைசியில் காதலால்
பைத்தியமாக மாறினேன்
இவ்வளவவிற்கும் காரணம் இதோ நிற்கிறானே பிச்ச இவன்தான்
வேலை செய்த எனக்கு சம்பளம் கொடுத்தானா?இவனைப்போன்ற கயவர்களுக்கு ஓசியில் வேலை செய்யவா என் பெற்றோர் என்னை பெற்று
படிக்க வைத்தார்கள்?
இவன் செய்த குற்றம் கொஞ்ச நஞ்சமல்ல மருத்துவம் என்னும் பெயரில் அங்கு வரும்
நேயாளிகளை இவனுடைய சுயனலனுக்ககா அவர்களை
மன நோயாளிகளாக மாற்றினான்
இவன் பேச்சை கேட்காத நோயாளிகளை இரும்பு பைபுகளால் அடித்தான்
இவனுக்கு அடிக்க அதிகாரம் யார் கொடுத்தது இன்னும் ஒரு படி மேல் சென்று
அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை கொடுத்து அவர்களை முழு மன நோயாளிகளாக
மாற்றினான்
அதுமட்டுமா? இவன் வாங்கும் பணமோ
அதிகம் ஆனால் இவன் ஒரு பேராசைக்காரன் அதனால்
ரேசன் கடையில் திருட்டுத்தனமாக அரிசி, பருப்பு வாங்கி
அவற்றை சமைத்து போடுகிறான்
இவனால்
பாதிக்கப்படவர்கள் நிறைய பேர் அதில் ஒருவன் இவனைப்பற்றி சமுக வலை தளத்தில்
பதிவிட்டான் என்ற காரணத்திற்காக சூழ்ச்சியால் பிடித்து கட்டிப்போட்டு அடித்து
அவனிடம் 150 ருபாய் பத்திரத்தில்
கையெழுத்து வாங்கி
அதன்பிறகு அவன் தாயிடம் ஒப்படைத்தான்
இவற்றையெல்லாம் நான் வெளியில் சொல்லிவிடுவேன் என்பதற்காக என்னையும்
சூழ்ச்சியால் அடைக்க நினைத்தான்
ஓடினேன் அவனுக்கு பயந்தல்ல அவன் செய்தவற்றை எப்படியாவது வெளி உலகிற்கு
சொல்லவேண்டும் என்பதற்காக
அவன் விடவில்லை
சூழ்ச்சி மேல் சூழ்ச்சி செய்தான் என் பெற்றோரிடம் நான் மன நோய்க்கு
ஆளாகியிருக்கிறேன் என்றெல்லாம் சொன்னான்
அவர்களும் என்னை
பிடிக்க முயற்சி செய்தார்கள் முடியவில்லை
ஓடினேன் எங்கு போவதென்றே தெரியாமல் ஓடினேன், விட்டானா இவன் என் நண்பனிடம்
சொல்லி பிடித்துதர முயற்சி செய்தான் முடியவில்லை இறுதியில் என் காதலியிடம் சொல்லி
பிடிக்கபார்த்தான்
ஆனால் அவனால் என்னை பிடிக்க
முடியவில்லை இறுதியில் என் பெற்றோரை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்திருக்கிறான் இந்த
சண்டாளன்
இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்
உண்மையில் குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டியவன் இவன்தான் ஆனால் நிற்பதோ எந்த
தவறும் செய்யாத நான்
இவனைப்போன்றோற்கு அனுமதி வழங்கியது யார் குற்றம்?லஞ்சம் வாங்கிக்கொண்டு
எதையும் முறையாக ஆராயாமல் அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் செய்த குற்றம்
லஞ்சம் வாங்குவோர் மீது கடுமையான சட்டம் போட்டிருக்கவேண்டும் அதுமட்டுமல்ல
லஞ்சம் கொடுப்பர்களுக்கு மிக கடுமையான தண்டனை கொடுத்திருக்கவேண்டும் செய்தார்களா?
அன்று அரசு அதிகாரிகள் முறையாக நேர்மையாக நடந்திருந்தால் இன்று இவனைபோன்றோர்
முளைத்திருப்பர்களா?
பலரும் இவனால் பாதிக்கப்பட்டிருப்பார்களா?
கடுமையான சட்டம் இயற்றப்படாமல் குற்றங்கள் கலையப்படாதவரை எனைபோன்றோர் இங்கு
முளைத்துக்கொண்டேதான் இருப்பார்கள்
இதுதான் என் வாழ்கையின் எந்தபக்கம் புரட்டினாலும் காணப்படும் அனுபவம்,பயனுள்ள
அரசியல் தத்துவம்.
நன்றி.